அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்...) தமுமுக,மமக தஞ்சை(தெ) மாவட்டம் இணையதிற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்... மின்னஞ்சல் தொடர்புக்கு : tmmkthanjai@gmail.com

புதன், 20 பிப்ரவரி, 2013

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் : மமக‏

மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ தலைமையில் இன்று (19.02.2013) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ.,  ப. அப்துல் சமது, எம். தமிமுன் அன்சாரி, குணங்குடி ஆர்.எம்.அனிபா, எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, கோவை இ. உமர் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:

தீர்மானம் 1

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அறிவிக்கக்கோரி சென்னையில் உண்ணாவிரதம் இருந்த சர்வோதயா இயக்கத்தைச் சேர்ந்த காந்தியவாதி சசி பெருமாள் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு 21வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். அவரை உடனடியாக விடுதலை செய்து, அவர் மீதான அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும் என்றும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசை இந்த உயர்நிலைக் குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 2

வீரப்பன் கூட்டாளிகள் என்று கருதப்படும் மாதையன், ஞானபிரகாசம், பிலவேந்திரன், சைமன் ஆகியோர் மீதான தூக்குத் தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை இந்த உயர்நிலைக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3

தமிழக முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை, ஆயுள் தண்டனையை அனுபவித்த முஸ்லிம்கள் உட்பட அனைத்து சிறைவாசிகளையும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசை இந்த உயர்நிலைக்குழு வலியுறுத்துகிறது.

0 comments:

கருத்துரையிடுக

--